Monday, August 3, 2009

புதிய பதிவர்களுக்கு அனுபவ பதிவர்களின் அறிவுரைகள்

என்னடா நான் எழுதலாம் அப்படினுன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதுதான் மத்த பதிவர்களோட வலைப்பூவில் அனுபவ பதிவர்கள் கொடுத்து இருந்த ஆலோசினைகள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது அதை ஏன் நாம் மற்ற புதிய வலை நண்பர்களுக்கு தெரிய படுத்த கூடாது அப்படின்னு அதையே தேர்தெடுத்து குடுத்திட்டேன் .

இதன் முலம் அப்படியே நாமும் பிரபலமாகலாம், ஒன்னு பாராட்டு அல்லது திட்டு ஏதோ ஒன்னு கழுதை நம்மளை ஒதச்சா சரி அப்படின்னு முடிவு பண்ணி, இங்கே அதை கொஞ்சம் எடிட் பண்ணி கொடுத்திறேக்கேன்:

முதல்ல நம்ம லண்டன் ராதாகிருஷ்ணன் :
http://ellaam-irukkum-varai.blogspot.com/

பல எண்ணங்களை கதைகளாக, கட்டுரைகளாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்கே எழுதி வருவதுண்டு. எனக்குத் தெரிந்த நண்பர்கள் வலைப்பூ ஒன்றை ஆரம்பியுங்கள் என்று சொல்ல 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சிந்தனையும் இல்லை, மேலும் எழுதும் எழுத்தில் அலங்காரம் பூசும் அளவுக்கு தமிழ் இலக்கியவாதியும் நான் இல்லை என்றே இருந்தேன். பின்னர் எனது எழுத்துக்களையெல்லாம் சேகரிக்கும் தளமாக பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பித்தேன்.

தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும். என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.
அடுத்து நம்ம கோவி.கண்ணன் :
http://kathaisolluvoma.blogspot.com/


விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில சமயம் பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்படுன் எழுதப்படும் கட்டுரைகள் கவனம் பெறாமல் போவதுண்டு.

மற்றபடி எழுத்துப் பயிற்சிக்கான சிறந்த களம் வலைப்பதிவு.
அடுத்து மயாதி:

http://konjumkavithai.blogspot.com/

இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால எல்லோரும் எழுத்தாளர்களா( நான் உட்பட)?
இன்னும் எனக்குச் சந்தேகம், போகப் போக நீங்களும் உணர்வீர்கள்...
அக்பர் :
http://sinekithan.blogspot.com/


நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.

மற்றவர்கள் விஷயத்தில் கருத்துசொல்ல தேவைஇல்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தவர்களே இங்கு சண்டை இடுகிறார்கள்.

நல்ல எழுத்துக்கள் வரவரத்தான் மாற்றம் ஏற்படும்.

வந்தியத்தேவன் :
http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_02.html


நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள் நிறைய வித்தியாசம் உணர்வீர்கள். சிலவற்றை நானா எழுதினேன் என்ற ஆச்சரியமும் சிலவற்றில் தவறு இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்ற எண்ணமும் வரும்.

மறுபடியும் வெ.ராதாகிருஷ்ணன்
http://ellaam-irukkum-varai.blogspot.com/



நான் படித்தவரை பலருடைய பதிவுகள் மிகவும் தரம் வாய்ந்தவையாகவே எனது கண்களுக்குப் பட்டன. விமர்சித்து எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளில் இருந்த சில வார்த்தைகளைத் தவிர. எழுதுபவர்கள் மிகவும் கோர்வையாகவும், நேர்த்தியாகவும் எழுதுகிறார்கள்.

எழுத்து அழகிற்கு இல்லாமல், எண்ண அழகினை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொருடைய பதிவும் மிகவும் சிறப்பே.

எழுத்தாளர்களாக வேண்டும் என்பதில்லை, சொல்லும் கருத்துக்கள் மூலம் ஒரு தாக்கம் ஏற்படுத்தினாலே அதுவே எழுத்துக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிடுகிறது.

திருமதி ஜெயசீலன் :
http://sirusinthanaikal.blogspot.com/


உங்க பதிவு உங்களுக்கே பல நேரங்களில் ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.இது தான் உங்கள் எழுத்து திறமையின் ஆரம்பம்.நம் பதிவையும் பலர் படிக்கிறார்கள்,என பார்க்கும்போது,ந்ம்மையுன் இந்த ஏழுத்துலகு வரவேற்ககிறது,என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொடர்ந்து எழுதுங்க்கள்

2 comments:

  1. எப்படி இப்புடி

    ரூம் போட்டு யோசிபிங்களோ

    அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete